நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. டெல்லியில் ரூ.59-க்கும், சென்னையில்ரூ.60-க்கும் விற்கப்பட்டது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மழை காரணமாக தக்காளி அழுகியதாலும், சந்தைக்கு வரத்து குறைந்ததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
நேற்று பெருநகரங்களில் விலை அதிகரித்து காணப்பட்டது. கொல்கத்தாவில் சில்லறை விலையில் கிலோ ரூ.93-க்கு விற்கப்பட்டது. மொத்த விலை சந்தையிலும் கிலோ ரூ.84 ஆக இருந்தது.
அதுபோல், டெல்லியில் ரூ.59-க்கும், சென்னையில்ரூ.60-க்கும் விற்கப்பட்டது.
[embedded content]
Source: Maalaimalar