Press "Enter" to skip to content

கொல்கத்தாவில் தக்காளி கிலோ ரூ.93-க்கு விற்பனை

நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. டெல்லியில் ரூ.59-க்கும், சென்னையில்ரூ.60-க்கும் விற்கப்பட்டது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மழை காரணமாக தக்காளி அழுகியதாலும், சந்தைக்கு வரத்து குறைந்ததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

நேற்று பெருநகரங்களில் விலை அதிகரித்து காணப்பட்டது. கொல்கத்தாவில் சில்லறை விலையில் கிலோ ரூ.93-க்கு விற்கப்பட்டது. மொத்த விலை சந்தையிலும் கிலோ ரூ.84 ஆக இருந்தது.

அதுபோல், டெல்லியில் ரூ.59-க்கும், சென்னையில்ரூ.60-க்கும் விற்கப்பட்டது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »