கடந்த ஆட்சி காலத்தில் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படாமல் இருந்த சின்ன (மினி) பேருந்துகள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னையில் சின்ன (மினி) பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதால், மெட்ரோ தொடர் வண்டி பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் சின்ன (மினி) பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடந்த சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 210 சின்ன (மினி) பேருந்துகளில் 66 சின்ன (மினி) பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் சின்ன (மினி) பஸ் பயணிகளின் பயன்பாடு குறைந்து, நிதி இழப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 144 சின்ன (மினி) பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, முதல் கட்டமாக 12 சின்ன (மினி) பேருந்துகள் இம்மாதத்தில் இயக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம், சென்னை மெட்ரோ தொடர் வண்டி பயணிகளின் எண்ணிக்கை உயர்வதுடன், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் அதிகரிக்கும் எனவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆட்சி காலத்தில் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படாமல் இருந்த சின்ன (மினி) பேருந்துகள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar