சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் வீட்டில் ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை :
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை 6 மணிமுதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் அவருக்கு சொந்தமான 3 இடங்களிலும் சேலத்தில் ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் எடிப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர் ஆர். இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar