Press "Enter" to skip to content

கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுமா? – மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை:

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலர், மருத்துவத்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பண்டிகைக் காலம் நெருங்குவதால் கூடுதல் தளர்வு அல்லது கட்டுப்பாடு விதிப்பது குறித்து இதில் ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »