Press "Enter" to skip to content

உருப்படியான அரசியல் எதையும் பேசுவதில்லை… அண்ணாமலை கருத்துக்கு திருமாவளவன் பதிலடி

கவன ஈர்ப்புக்காக பாஜகவினர் வாயில் வந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை:

பாஜக மீது கைவைத்தால் திமுவுக்கு வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கப்படும்  என பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். 

இதற்கு திமுகவின் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

‘கவன ஈர்ப்புக்காக வாயில் வந்ததை எல்லாம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாஜகவினர் உருப்படியான அரசியல் எதையும் பேசுவதில்லை. தனிநபர் விமர்சனம் செய்வதன் மூலம் அனைவரும் தங்களை கவனிக்க வேண்டும், தங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்ற உளவியலை கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் பலவீனத்தை காட்டுகிறது’ என திருமாவளவன் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »