Press "Enter" to skip to content

மெட்ரோ தொடர் வண்டி நிலையங்களில் இருந்து சின்ன (மினி) பஸ் சேவை: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை, மெட்ரோ தொடர் வண்டி நிலையங்களில் இருந்து 12 சின்ன (மினி) பேருந்துகள் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னை:

சென்னையில் சின்ன (மினி) பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதால், மெட்ரோ தொடர் வண்டி பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் சின்ன (மினி) பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 210 சின்ன (மினி) பேருந்துகளில் 66 சின்ன (மினி) பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் சின்ன (மினி) பஸ் பயணிகளின் பயன்பாடு குறைந்து, நிதி இழப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 144 சின்ன (மினி) பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த சின்ன (மினி) பஸ்களை சிறந்த முறையில் பயன்படுத்திட பிற பகுதிகளிலிருந்து மெட்ரோ தொடர் வண்டி நிலையங்களுக்கு இயக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,  சென்னை, மெட்ரோ தொடர் வண்டி நிலையங்களில் இருந்து 12 சின்ன (மினி) பேருந்துகள் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார். ஆலந்தூர், விமான நிலையம், கோயம்பேடு, திருவொற்றியூர் பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிலையங்களில் சின்ன (மினி) பஸ்கல் இயக்கப்பட உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »