இந்தியாவில் 125 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும், பெரும்பாலானவர்கள் 2-வது டோஸ் இன்னும் எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் 2-வது டோஸ் 12 வாரங்களில் இருந்து 14 வாரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். கோவேக்சின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் 28 நாட்களுக்குப் பிறகு 2-வது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் 2-வது டோஸ் எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவி வருவதால் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டால் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.
இதனால் ஒவ்வொரு மாநில அரசுகளும் 2-வது டோஸ் செலுத்தாதவர்களின் பட்டியலை சேகரித்து அவர்களுக்கு 2-வது டோஸ் செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது பெரும்பாலான இடங்களில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரவைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகராட்சி, விண்மீன்ட் போன் திட்டத்தை அறிவித்துள்ளது.
டிசம்பர் 4-ந்தேதியில் இருந்து டிசம்பர் 10-ந்தேதிக்குள் 2-வது டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் பெயர்கள் சேரிக்கப்பட்டு, குலுக்கல் போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு 50 ஆயிரம் மதிப்பிலான திறன்பேசி பரிசாக வழங்கப்படும்.
அதேபோல், டிசம்பர் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் நகர சுகாதார மையத்தில் உள்ள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக 21 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’’ என நகராட்சி கமிஷனர் அமித் ஆரோரா தெரிவித்துள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar