நாகாலந்தில் பாதுகாப்பு படையினரால் சுட்டு இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்த நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ சிறப்பு புலனாய்வுக் குழுவின் கீழ் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
நாகாலாந்து மாநிலத்தின் மோன் என்ற மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அசாம் ரைபிள் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 13 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் குறித்து விசாரணை நடத்தும்போது, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்று பின்னர் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக, இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, சிறப்பு புலனாய்வுக் குழுவின் கீழ் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டு அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்.. சவுதி அரேபியாவில் தேர் விபத்து- கேரள தம்பதி உள்பட 5 பேர் உயிரிழப்பு
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar