பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் காவல் துறையினர்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மூன்றடுக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர் வண்டி நிலைங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கேரளா சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் வரை பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். அங்காங்கே சி.சி.டி.வி. ஒளிக்கருவி (கேமரா) பொருத்தப்பட்டு காவல் துறையினர் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
[embedded content]
Source: Maalaimalar