Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் இரட்டை நிலநடுக்கம் – 22 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காபூல்:

மேற்கு ஆப்கானிஸ்தானில் பிற்பகல் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், மாலை 4 மணிக்கு 4.9 ரிக்டர் அளவுகோலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த இரு நிலநடுக்கங்களில் குடியிருப்பு வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்து உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »