கொரோனா பாதிப்பால் வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ஆந்திர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அரசியல், திரையுலம், விளையாட்டு உள்ளிட்ட முக்கிய துறைகளின் பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சரும், தற்போதைய அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா பரிசோதனையில் லேசான அறிகுறிகளுடன் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை விரைவில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருங்கள். இவ்வாறு தமது தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar