Press "Enter" to skip to content

இங்கிலாந்தில் புதிய கொரோனா மாறுபாடு கண்டுபிடிப்பு?

ஒமைக்ரானின் புதிய மாறுபாடு காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன்:

கொரோனா வைரசில் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டறியப்பட்டது. இதற்கு ஆல்பா, டெல்டா, பீட்டா, காமா என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது.

இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்ட அந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மற்ற உருமாறிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)களை விட மிகவும் வேகமாக பரவக் கூடியது என்று 30-க்கும் மேற்பட்ட பிறழ்வுகளை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது பெரும்பாலான நாடுகளில் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவின் புதிய மாறுபாடு இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது ஒமைக்ரான் வைரசில் இருந்து உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒமைக்ரான் வைரசின் துணை திரிபான பிஏ-2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டறியப்பட்டது. அந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சமீபத்தில் பரவத் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரானின் புதிய துணை மாறுபாடான பிஏ-2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இங்கிலாந்தில் கண்டறியப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாறுபாடு தொடர்பாக இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். பிஏ-2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) டென்மார்க்கில் அதிகமாக பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளிலும் பரவி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் இந்தியாவிலும் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு விரைவில் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு தகவலின்படி ஒமைக்ரான் மாறுபாடு மூன்று துணை திரிபுகளை கொண்டுள்ளது.

பிஏ-1, பிஏ-2 மற்றும் பிஏ-3 என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒமைக்ரான் பாதிப்பு 99 சதவீதம் பிஏ-1 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பை கொண்டிருந்த நிலையில் தற்போது பிஏ-2 மாறுபாடும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரானின் புதிய மாறுபாடு காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்… நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- வேட்பாளர் வைப்பீடு 4 ஆயிரம் ரூபாயாக உயர்வு

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »