Press "Enter" to skip to content

நெல்லை உள்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், 4 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை தகவல் மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »