நெல்லை பொன்னாக்குடி அருகே கல் குவாரியில் பாறை சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை பொன்னாக்குடி அருகே கல் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் நேற்று குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, நேற்று இரவு கல் குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கல் குவாரியில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
மேலும், கல் குவாரியில் சிக்கியுள்ள4 பேரை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. மீட்புப் பணிகளில் உலங்கூர்தி, ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்தனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar