Press "Enter" to skip to content

மீண்டும் அதிகரித்த சமையல் எரிவாயு உருளை விலை

கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சென்னை :

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் கல்லெண்ணெய், டீசல், சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது எரிவாயு உருளை விலை மேலும் உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1,018க்கு விற்பனையாகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது.

இதையும் படிக்கலாம்…கணினிமய விளையாட்டுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி – மந்திரிகள் குழு முடிவு

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »