Press "Enter" to skip to content

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு- மத்திய அரசு அறிவிப்பு

20 லட்சம் டன் சூரியகாந்தி, சோயா எண்ணெயை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சூரியகாந்தி, சோயா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வரியில் விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வரி விலக்கு அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2024 மார்ச் வரை ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு செஸ் மற்றும் சுங்க வரி விலக்கு செய்துள்ளது. 20 லட்சம் டன் சூரியகாந்தி, சோயா எண்ணெயை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. இந்தோ- பசிபிக் பகுதியில் அமைதியை உறுதி செய்த குவாட் அமைப்பு

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »