Press "Enter" to skip to content

மணமக்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ வேண்டும்- முதலமைச்சர்

ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு சவரன் தங்க தாலி மற்றும் 33 பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை:

சென்னை திரு.வி.க. நகர் காமராஜர் மாநகராட்சி  திருமண மண்டபத்தில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.

இதைத்தொடர்ந்து  ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு சவரன் தங்க தாலி மற்றும் 33 பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்பை முதலமைச்சர் வழங்கினார்.

திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

* மிகவும் பாழடைந்து கிடந்த மாநகராட்சி மண்டபத்தை நான் தான் சீரமைத்தேன்.

* அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மண்டபம் புனரமைப்புக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை போராடி வாதாடி வென்றோம்.

* மக்களின் கோரிக்கையை ஏற்று மண்டபத்தை புதுப்பித்து காமராஜர் மண்டபம் என பெயர் வைத்தோம்.

* மணமக்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »