Press "Enter" to skip to content

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழக காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். 

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர்  இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து விட பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

கல்லணை திறப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக தஞ்சை நீர்வளத்துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »