Press "Enter" to skip to content

சென்னை திருவான்மியூர் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடினர்.

சென்னை:

சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில், நேற்றிரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீயை அணைக்கும் பணியில் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ வேகமாக பரவியதால், 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

முன்னதாக அந்த கட்டிடத்தின் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.  மேலும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக அந்த பகுதி புகை மூட்டமாக காட்சி அளித்தது.  

தீ விபத்திற்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை. இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »