Press "Enter" to skip to content

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தில் உயிரிழந்த தாய்மார்கள் – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தில் உயிரிழந்த தாய்மார்கள் – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்Jan 29, 2020 17:38:51 pmJan 29, 2020 17:38:55 pmWeb Team

செல்போனில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் தாய் பலியான சம்பவம் குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் ஆரிப் நகர் இம்ரானின் மனைவி பரீதா, ஜனவரி 21ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றெடுத்தார். அடுத்த சில மணி நேரத்தில் பரீதா உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக அன்றைய தினம் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களிடம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் நடத்திய விசாரணையில், மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லாததால், அவர்களிடம் செல்போனில் ஆலோசனை பெற்று செவிலியர்களே பிரசவம் பார்த்தது தெரியவந்தது.

அதேபோல் கடந்த வாரம் நாமக்கல் மாவட்டம் தோசூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த நிலையில், உடலுக்குள் ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
இந்த நிகழ்வுகள் குறித்து நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இரு செய்திகளின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் 4 வாரத்தில் தனித்தனியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM

© Puthiyathalaimurai | ALL RIGHTS RESERVED

Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »