Press "Enter" to skip to content

கஞ்சாவுக்கு அடிமையான தம்பி – கொலை செய்த அண்ணன்

மதுரை வண்டியூர் அருகே போதைக்கு அடிமையான தம்பியை அண்ணன் கழுத்தை நெறித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வண்டியூர் சுந்தர் நகர் 2 வது தெருவை சேர்ந்தவர் சிக்கந்தர் மைதீன். இவரது மனைவி ஹபீபா பேகம். இவர்களுக்கு யாசர் அராபத், அசாருதீன் என்ற இரண்டு மகன்கள்.
இந்நிலையில், தம்பி அசாருதின் போதைக்கு(கஞ்சா) அடிமையாகி அடிக்கடி தாய், தந்தையிடம் போதைப்பொருள்(கஞ்சா) வாங்க காசு கேட்டு துன்புறுத்தியதோடு, அண்ணன் யாசர் அராபத்தை தகாத வார்த்தைகளில் பேசி பிரச்சனை செய்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தாய் ஹபீபா பேகம் மற்றும் மூத்த மகனான யாசர் அராபத் இருவரும் இணைந்து அசாருதீனின் கை, கால்களை துணியால் கட்டி கழுத்தை நெறித்து கொலை செய்ததாக தெரிகிறது. இது குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாய் மற்றும் மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இறந்தவரின் உடலை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »