Press "Enter" to skip to content

மனைவி தற்கொலையால் சோகம்: 2 குழந்தைகளுடன் கணவர் தற்கொலை

ராணிப்பேட்டை அருகே 2 குழந்தைகளுடன் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாலாஜாபேட்டை ரயில் நிலையம் அருகே வெங்கடேசன்(30) என்பவர் தனது இரு குழந்தைகளான சஞ்சனா ஸ்ரீ (2), ரித்திகா ஸ்ரீ (1) ஆகியோருடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை வெங்கடேசனின் மனைவி நிர்மலா(24) குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் இருந்து வந்த கணவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாலாஜா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »