விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் உயிரிழந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த அமல்ராஜ் – சுஷ்மிதா தம்பதியின் ஒரு வயது ஆண் குழந்தை விகாஷ். தாய் சுஷ்மிதா, குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர், திரும்பி வந்து பார்த்த போது குழந்தை ஆகாஷ் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிர்ச்சியில் சுஷ்மிதா கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் வந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தினர். குழந்தையின் இறப்பில் மர்மம் உள்ளதாகவும்தன்னுடைய கணவரே தண்ணீர் தொட்டிக்குள் குழந்தையை மூழ்கடித்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் சுஷ்மிதா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குழந்தையின் இறப்பு குறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai