Press "Enter" to skip to content

அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் : ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாகவும் இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த உரைக்கு பிறகு, பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பொருளாதார ஆய்வறிக்கை இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இது புதிய நூறு ரூபாய் நோட்டு போல லாவண்டர் நிறத்தில் இருந்தது. இந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிப்பிடும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வரும் நிதியாண்டில் 6 முதல் 6.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கில் தளர்வு செய்யப்படும்.
* அந்நிய நேரடி முதலீடு, தேவையை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில், பொருளாதார வளர்ச்சி மேம்படும்.
* நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில், ஜிஎஸ்டி வசூல் 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
* வரும் 2024-25 நிதியாண்டில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை எட்ட, கூடுதலாக உள்கட்டமைப்புகளுக்கு 1.4 லட்சம் கோடி (சுமார் 100 லட்சம் கோடி) முதலீடு செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு பற்றாக்குறை தடையாக இருக்கக்கூடாது.
* கடந்த 2011-12 முதல் 2017-18 நிதியாண்டு வரை ஊரக மற்றும் நகர பகுதிகளில் புதிதாக 2.62 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் எண்ணிக்கை 18 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களுக்கான வேலை வாய்ப்பு 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
* கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் புதிய நிறுவனங்கள் உருவாக்கம் ஆண்டுக்கு 12.2 சதவீதம் வீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. புதிய நிறுவனங்கள் உருவாக்கம் 2014ல் 70,000 ஆக இருந்தது, கடந்த 2018ல் 80 சதவீதம் அதிகரித்து 1.24 லட்சமாக உயர்ந்துள்ளது.
* விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது, புதிய கடன்கள் வழங்குவதற்கு இடையூறாக உள்ளது. மேலும், அதே விவசாயிகளுக்கு கடன் வழங்குவதையும் குறைக்கிறது.
* பிரதமர் ஆவாஸ் – கிராமின் திட்டத்தில் கடந்த 2018-19 நிதியாண்டில் 47.33 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2014-15 நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், கால்நடை வளர்ப்பு மூலம் வருவாய் 7.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
* மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுத்து வந்தபோதும், மரங்கள் மற்றும் வன பரப்பளவு  80.73 மில்லியன் ஹெக்டேராக உள்ளது. இது, நாட்டின் புவி பரப்பளவில் 24.56  சதவீதம்.
* ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதன் மூலம் 2025ல் 4 கோடி வேலை  வாய்ப்புகளையும், 2030ல் 8 கோடி வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும். இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சைவம் சாப்பிட்டால் 10,887 மிச்சமாகுமாம்

பொருளாதார மந்த நிலையால் மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து விட்டதால், பெரும்பாலான ஓட்டல்கள் வாடிக்கையாளர்கள் குறைந்ததால் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. நிலைமை இப்படியிருக்க, நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2006-07 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில் சைவ சாப்பாடு வாங்கும் விலையில் இருப்பது 29 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் அசைவ சாப்பாட்டு வாங்கும் விலையில் இருப்பது 18 சதவீதம்தான் அதிகரித்துள்ளது. அதாவது, 5 பேர் கொண்ட குடும்பத்தில், தினமும் குறைந்த பட்சம் 2 சைவ சாப்பாடு  சாப்பிடுபவர்கள் ஆண்டுக்கு 10,887ம், 2 அசைவ சாப்பாடு சாப்பிடுபவர்கள் 11,787ம் மிச்சப்படுத்த முடியுமாம்.

ஆய்வறிக்கையில் திருக்குறள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட்டில் புறநானூற்று பாடல் வரிகளை கூறினார். இதுபோல் நேற்று அவர் சமர்ப்பித்த பொருளாதார ஆய்வறிக்கையில் 2 திருக்குறள் இடம்பெற்றுள்ளது. அவை வருமாறு: ‘‘பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று’’விளக்கம்: பொருள் (செல்வ வளம்) என்று சொல்லக்கூடிய அணையா விளக்கு மட்டும் கையில் இருந்து விட்டால், நினைத்த இடத்துக்குச் சென்று பகையென்னும் இருளை துரத்தி விடும்.‘‘செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும் எஃகுஅதனின் கூரியது இல்’’
விளக்கம்: ஒருவன் பொருளை ஈட்டவேண்டும்; அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்கவல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »