Press "Enter" to skip to content

ரஞ்சி டிராபி கிரிக்கெட்: கர்நாடகா, உத்தர பிரதேசம், குஜராத் அணிகள் வெற்றி

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் 6-வது சுற்றில் கர்நாடகா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சவுராஷ்டிரா, குஜராத் அணிகள் வெற்றி பெற்றன.

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் 6-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 27-ந்தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்றன. இதில் பெரும்பாலான ஆட்டங்கள் நேற்றைய 3-வது நாளிலேயே முடிவடைந்தன. இன்றைய கடைசி நாளில் சில போட்டிகளில் முடிவுகள் கிடைத்தன. சில ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

அசாம் அணிக்கெதிராக ஒடிசா இன்னிங்ஸ் மற்றும் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திரிபுராவுக்கு எதிராக மகாராஷ்டிரா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேகாலயா – பீகார், பெங்கால் – டெல்லி, நாகலாந்து – மிசோரம், மும்பை – இமாச்சல பிரதேசம், சத்தீஷ்கர் – ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் – ஹரியானா,  சண்டிகர் – புதுச்சேரி இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

மணிப்பூரை 232 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிக்கிம். கேரளாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆந்திரா. விதர்பாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத். ஐதராபாத் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான். பரோடாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சவுராஷ்டிரா.

மத்திய பிரதேசம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உத்தர பிரதேசம். ரெயில்வேஸ் அணியை கர்நாடகாவும், ஜார்க்கண்ட்-ஐ சர்வீசஸ் அணியும், அருணாச்சல பிரதேசம் அணியை கோவாவும் வீழ்த்தின.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »