Press "Enter" to skip to content

கோபா அமெரிக்கா கால்பந்து – பெருவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பிரேசில்

கோபா அமெரிக்கா கால்பந்தில் இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கொலம்பியா, அர்ஜெண்டினா அணிகள் மோதுகின்றன.

ரியோடிஜெனீரோ:

47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. அதில் நேற்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் பிரேசில் அணியும், பெரு அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியின் 35வது நிமிடத்தில், பிரேசிலின் நெய்மர் பாஸ் செய்த பந்தை லூகாஸ் பகுட்டா கோலாக மாற்றினார். இதன்மூலம் முதல் பாதியில் பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இரண்டாம் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. பெரு அணியினரும் ஒரு கோலும் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பிரேசில் அணி 21-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »