Press "Enter" to skip to content

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் திருச்சி வாரியர்ஸ்‌- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை:

5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக். (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் 2 ஓட்டத்தில் கோவை கிங்சை தோற்கடித்தது. மதுரை பாந்தர்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதிய மற்றொரு போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

14-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் திருச்சி வாரியர்ஸ்‌- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

திருச்சி வாரியர்ஸ் 6 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4- வது வெற்றி வேட்கையில் இருக்கிறது. சேலம் அணி 3 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூருடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் நெல்லையிடம் தோற்றது. 3-வது ஆட்டத்தில் சேலம் அணியை 4 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது.

3 புள்ளிகளுடன் இருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

திண்டுக்கல் அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »