Press "Enter" to skip to content

ஐஎஸ்எல் கால்பந்து – சென்னையை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றீயது கொல்கத்தா

கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதி போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

கோவா:

6-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கோவாவில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் 2 முறை சாம்பியன்களான சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில் கொல்கத்தா அணி வீரர் சேவியர் ஹெர்னாண்டர்ஸ் சிறப்பாக ஆடி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் கொல்கத்தா அணி 1-0 என முன்னிலை வகித்தது. 

இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் 48-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் எடு கார்சியா ஒரு கோல் அடித்தார். இதனால் கொல்கத்தா 2-0 என முன்னிலை வகித்தது.

ஆனால் சென்னை அணியின் வல்ஸ்கிஸ் 69வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என சென்னை அணி பின்தங்கியது. கடைசி கட்டத்தில் கொல்கத்தா அணியின் சேவியர் ஹெர்னாண்டஸ் 93வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், கொல்கத்தா அணி 3-1 என்ற கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியால் ரசிகர்களின்றி ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »