Press "Enter" to skip to content

சையத் முஷ்டாக் அலி டிராபி: காலிறுதியில் தமிழநாடு- இமாசல பிரதேசம் மோதல்

சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான காலிறுதி போட்டிகள் நடைபெறும் மைதானமும், போட்டி நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், ஹரியானா, பரோடா, பீகார், ராஜஸ்தான் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

காலிறுதியில் மோதும் அணிகள் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலிறு போட்டிகள் அனைத்தும் உலகின் மிகப்பெரிய மைதானமான மொதேராவில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் நடக்கிறது.

ஜனவரி 26-ந்தேதி 2 காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரு ஆட்டத்தில் கர்நாடகா – பஞ்சாப் அணிகளும் மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு – இமாச்சல பிரதேச அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஜனவரி 27-ந்தேதி ஹரியானா – பரோடா அணிகளும் பீகார் – ராஜஸ்தான் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரண்டு அரையிறுதிகளும் ஜனவரி 29-ந்தேதியும், இறுதிப் போட்டி ஜனவரி 31-ந்தேதியும் நடக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »