Press "Enter" to skip to content

3-வது 20 போட்டி – இந்திய அணிக்கெதிராக நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு

இந்திய அணிக்கெதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஹாமில்டன்:

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

ஆக்லாந்தில் நடந்த முதல் 2 ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

3-வது 20 ஓவர் போட்டியின் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி விபரம்:-

ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ராஸ் டெய்லர், டிம் செய்பெர்ட், மிட்செல் சான்ட்னெர் அல்லது டேரில் மிட்செல், சோதி, டிம் சவுதி, பிளேர் டிக்னெர் அல்லது குஜ்ஜெலின், ஹாமிஷ் பென்னட்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »