தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா.
நீரஜ் சோப்ரா
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா.
இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் தென்ஆப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றார். அப்போது 87.86 மீட்டர் தூரம் அளவிற்கு ஈட்டி எறிந்தார். இதன் மூலம் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வேண்டுமென்றால் 85 மீட்டருக்கு குறையாமல் ஈட்டி எறிதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar