Press "Enter" to skip to content

ஐபிஎல் தொடரில் விளையாட முடியாதது வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தான் வீரர் சொல்கிறார்

ஐபிஎல் அறிமுகம் சீசனில் கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்த சோஹைல் தன்விர், ஐபிஎல்தான் உலகின் சிறந்த டி20 லீக் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால்  (பிசிசிஐ) 2008-ம் ஆண்டு இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் தொடர் தற்போது உலகளில் நம்பர் ஒன் டி20 லீக்காக திகழ்கிறது.

2008-ம் ஆண்டு நடைபெற்ற அறிமுக தொடரில் பாகிஸ்தான் வீரர்களும் கலந்து கொண்டனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்விர் இடம் பிடித்திருந்தார்.

அவர் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுதான் ஒரு பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சாக இருந்து வருகிறது. அறிமுக தொடரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைப்பற்ற இவரின் துடிப்பான பந்து வீச்சும் முக்கிய காரணமாக இருந்தது.

வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுக்கும் ஐபிஎல் தொடரில் 2009-ல் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது வரை தடை நீடித்து வரும் நிலையில், உலகின் நம்பர் ஒன் லீக் ஐபிஎல்தான். அதில் விளையாட முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று சோஹைல் தன்விர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோஹைல் தன்விர் கூறுகையில் ‘‘தொழில்முறை கிரிக்கெட்டர்களான நான் மற்றும் வேறு சில பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாதது குறித்து வருத்தம் அடைந்திருப்பார்கள். உலகின் நம்பர் ஒன் லீக் ஐபிஎல்தான். எந்தவொரு வீரரும் விளையாட விருப்பம் இல்லை என்று சொல்லமாட்டார்கள்.

நான் மைதானத்தில் மட்டும் அதிக அளவில் கற்றுக் கொள்ளவில்லை. வீரர்கள் அறையில் சில சீனியர் வீரர்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. வார்னர் உத்வேகம் அளிப்பதில் மிகச் சிறந்தவர். ஐபிஎல் போட்டியில் என்னை சிறப்பாக பயன்படுத்தினார்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »