Press "Enter" to skip to content

ஐ.எஸ்.எல். கால்பந்து – கேரளாவை 6-3 என வீழ்த்தி சென்னை அபார வெற்றி

கொச்சியில் நேற்று நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.

கொச்சி:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொச்சியில் நேற்று நடந்த 72-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் சென்னையின் எப்.சி அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே சென்னை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். அவர்களின் ஆட்டத்துக்கு கேரளா அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் பாதியின் முடிவில் சென்னை அணி 3-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் கேரளா அணியின் வீரர் ஒக்பீச் ‘ஹாட்ரிக்’ கோல் (48, 65, 76-வது நிமிடம்) அடித்தார். ஆனாலும், சென்னை அணியினர் பதிலுக்கு கோல் மழை பொழிந்தனர்.

நடப்பு தொடரில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் சென்னையின் வல்ஸ்கிஸ் (12 கோல்) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில், சென்னை அணி 6-3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சென்னை அணி தான் ஆடிய 14  ஆட்டங்களில் 6 வெற்றி, 3 டிரா, 5 தோல்வி என 21 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »