Press "Enter" to skip to content

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டி – டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி 20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மவுன்ட் மாங்கானு:

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டித் தொடர் சமீபத்தில் தொடங்கியது. இதில் 4-0 என்ற கணக்கில் டி 20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மவுன்ட் மாங்கானுவில் இன்று நடக்கிறது. இதில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவ்ருக்கு பதில் ரோகித் சர்மா கேப்டனாக பதவி வகிக்கிறார்.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி: கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ரோகித் சர்மா, (கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாகல், ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து அணி: மார்ட்டின் குப்தில், கொலின் முன்றோ, ராஸ் டெய்லர், டிம் சீபெர்ட் (விக்கெட் கீப்பர்), டாம் புருஸ், டேரி மிட்செல், மிட்செல் சான்ட்னர், ஸ்காட் குக்ளே, டிம் சவுத்தி (கேப்டன்), ஐஷ் சோதி, ஹமிஷ் பென்னட்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »