Press "Enter" to skip to content

பெண்கள் டி20 உலக கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது இந்தியா

பெர்த்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் அணியை 18 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது வெற்றி பெற்றது இந்தியா.

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதின.

டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. விக்கெட் கீப்பர் பாட்டியா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடி 17 பந்தில் 4 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 39 ரன்கள் விளாசினார். ரோட்ரிக்ஸ் அவர் பங்குக்கு 34 ரன்கள் சேர்த்தார். வேதா கிருஷ்ணமூர்த்தி 11 பந்தில் 20 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 142 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை முஷிதா கதுன் 30 ரன்களும், விக்கெட் கீப்பர் நிகர் சுல்தானா 35 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க வங்காளதேசம் அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »