Press "Enter" to skip to content

சென்னையின் எப்.சி. அணி கடைசி லீக் ஆட்டத்தில் கவுகாத்தியுடன் இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி கடைசி லீக் ஆட்டத்தில் கவுகாத்தியுடன் இன்று மோத உள்ளது.

சென்னை:

6-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டி தொடர் கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

சென்னையின் எப்.சி., ஆட் லெடிசோ டி கொல்கத்தா, எப்.சி. கோலா, பெங்களூரு எப்.சி., மும்பை சிட்டி, ஒடிசா எப்.சி., கேரளா, ஜாம்‌ஷட்பூர் நார்த்ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்றது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. இதுவரை நடந்த 89 லீக் ஆட்டங்கள் முடிவில் கோவா, கொல்கத்தா, பெங்களூர், சென்னை ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன. மற்ற 6 அணிகள் வெளியேற்றப்பட்டன.

இன்று 90-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் கவுகாத்தியில் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் சென்னையின் எப்.சி.- கவுகாத்தி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னையின் எப்.சி. 17 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 டிரா, 5 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றால் 3-வது இடத்துக்கு முன்னேறும். இதனால் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை அணி உள்ளது.

ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்ட கவுகாத்தி ஆறுதல் வெற்றிக்காக போராடும். அந்த அணி 17 ஆட்டத்தில் 2 வெற்றி, 7 டிரா, 8 தோல்வியுடன் 13 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »