Press "Enter" to skip to content

ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா?: 14 ஆம் தேதி முக்கிய ஆலோசனை

ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் வரும் சனிக்கிழமை நடக்கிறது. அப்போது தொடரை நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடப்பு ஆண்டு திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. வரும் 29-ம் தேதி தொடங்கி  மே 24-ம் தேதி வரை மொத்தம் 9 மாநிலங்களில் 60 ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.

கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஐபிஎல் போட்டிகளைக்காண மைதானங்களில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

இந்த நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் நாளைமறுநாள் (14-ம் தேதி- சனிக்கிழமை) கூடுகிறது.  முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் பிரிஜேஷ் படேல் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஐபிஎல் தொடர் குறித்து முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »