Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பீதி: ஆசிய லெவன் – உலக லெவன் இடையிலான போட்டிகள் ஒத்திவைப்பு

டாக்காவில் நடைபெற இருந்த ஆசிய லெவன் – உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் கொரோனா வைரஸ் பீதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசம் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் வங்காளதேசம் ஆசிய லெவன் – உலக லெவன் அணிகளுக்கு இடையில் டாக்கா மைதானத்தில் இரண்டு டி20 போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தது.

இந்த போட்டிகள் மார்ச் 21 மற்றும் 22-ந்தேதிகளில் நடைபெற இருந்தது. இதற்கான ஆசிய லெவன் அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்பட ஆறு இந்திய வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.

தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் போட்டிகள் தள்ளி வைக்கப்படுகிறது என்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »