இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணியை உடனடியாக சொந்த நாடு திரும்புமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வலியுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட 2-வது பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
இதற்கிடையில் கொரோனா வைரஸின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தள்ளி வைக்கப்படுகிறது என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. மேலும் உடனடியாக சொந்த நாடு திரும்ப வீரர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
ஆகவே, இன்றைய ஆட்டத்தை உடினடியாக ரத்து செய்துவிட்டு சொந்த நாடு திரும்ப இருக்கின்றனர் இங்கிலாந்து வீரர்கள். ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar