Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தல்: பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போட்டி அட்டவணையில் மாற்றம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை நான்கு நாட்களுக்கு முன் முடிவடையும் வகையில் போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதன்முறையாக வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் உலகளவில் நடைபெறும் பெரும்பாலான விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால் போட்டியை முடித்துவிட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விரும்புகிறது.

இதற்கிடையில் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களை அந்தந்த நாடுகள் உடனடியாக திரும்பும்படி வலியுறுத்தியுள்ளது. இன்று முதல் கடைசி லீக் ஆட்டங்கள் வரை மூடிய மைதானத்திற்குள் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் போட்டியை நான்கு நாட்களுக்கு முன் முடிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது. லீக் ஆட்டங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் என அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட், மார்ச் 18-ந்தேதி இறுதி போட்டியும், 17-ந்தேதி இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் நடைபெறும் என அறிவித்துள்ளது.

முன்னதாக பிளே-ஆஃப் சுற்றில் குவாலிபையர், எலிமினேட்டர் சுற்றுகள் நடைபெறும் வகையில் இருந்தது. தற்போது அது அரையிறுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »