Press "Enter" to skip to content

இந்தியா ஓபன் பேட்மிண்டன் ஏப்ரல் 12ம் தேதி வரை தள்ளிவைப்பு

கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை உள்ள போட்டிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால, இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அவ்வகையில் இந்தியாவில் வரும் 24-ம் தேதி தொடங்கவிருந்த இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை உள்ள போட்டிகள் ரத்து செய்யப்படும் அல்லது தள்ளி வைக்கப்படும் என உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஏப்ரல் 12ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி மார்ச் 24ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

இதேபோல் சுவிஸ் ஓபன், ஆர்லியன் மாஸ்டர்ஸ், மலேசிய ஓபன், சிங்கப்பூர் ஓபன் ஆகிய போட்டிகள் மற்றும் மூன்று சர்வதேச போட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

தற்போது நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டி நாளையுடன் (மார்ச் 15) முடிவடைகிறது. அதற்கு அடுத்த நாளில் இருந்து இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »