Press "Enter" to skip to content

ஏப்ரல் 15-ந்தேதிக்கு பின்புதான் ஐபிஎல் குறித்து முடிவு எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுமா? என்பது குறித்து ஏப்ரல் 15-ந்தேதிக்கு பின்புதான் முடிவு எடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரிண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பீதி அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

பெரும்பாலான முடிவுகள் மார்ச் 31-ந்தேதிக்கு பின் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது குறித்து ஏப்ரல் 15-ந்தேதிக்கு பின்னரே முடிவு எடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய மந்திரி ரிஜிஜு கூறுகையில் ‘‘ஐபிஎல் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதிக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். பிசிசிஐ மத்திய அரசுக்குக்கீழ் இல்லை. ஆனால் இது விளையாட்டை பற்றியது அல்ல. மக்கள் பாதுகாப்பை பற்றியது. ஏப்ரல் 15-ந்தேதிக்குப்பின் நாட்டின் சூழ்நிலையை பொறுத்து புதிய ஆலோசனைகள் வழங்கப்படும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »