Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தல்: தன்னைத்தானே தனிமை படுத்திக்கொண்ட மேரி கோம்

ஜோர்டான் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் இத்தாலியில் பயிற்சி மேற்கொண்ட மேரி கோம் தன்னைத்தானே தனிமைப் படுத்தியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். இவர் சமீபத்தில் ஜோர்டானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மேரி கோம் தகுதிப் பெற்றார்.

ஜோர்டானுக்கு செல்லும் முன் இத்தாலியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால் மேரி கோம் ஜோர்டானில் இருந்து வந்தபின் தன்னைத்தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

அப்போது எந்தவித மன அழுத்தமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேரி கோம் கூறுகையில் ‘‘சுமார் ஒரு மாதம் எனது குழந்தைகளிடம் இருந்து தனித்து இருந்த பின்னர், தற்போது நான் அமைதியாக இருக்கிறேன். எனது பயிற்சியை செய்து கொண்டிருக்கிறேன். எனது உடற்தகுதியில் அக்கறை எடுத்துக் கொண்டு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

நான் எதையும் பற்றி யோச்சிகாமல் எனது குடும்பத்துடன் இருக்கிறேன். இதுதான் தனிமைப்படுத்துதலின் சிறந்த பகுதி. என்னுடைய வேண்டுகோள் என்னவெனில், எவரும் பீதி அடைய வேண்டாம் என்பதுதான். உங்களுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியும் என்றால், முயற்சி செய்து உடன் இருங்கள்.

என்னை பொறுத்த வரைக்கும் தனிமைப்படுத்தியிருந்த நேரத்தில் சுதந்திரமாக இருந்ததாக உணர்கிறேன்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »