Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பீதி- 4 ஆயிரம் முககவசம் வழங்கும் பதான் சகோதரர்கள்

கொரோனா பீதியில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான்-யூசுப் பதான் சகோதரர்கள் 4 ஆயிரம் முகக்கவசங்களை நன்கொடையாக வழங்குகிறார்கள்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கிவிட்டது.

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பிரபலங்கள் மக்களுக்கு வீடியோ மூலம் விளக்கி வருகிறார்கள். தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று விழிப்புணர்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே கொரோனா பீதியில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் பதான் சகோதரர்கள் முகக்கவசங்களை வழங்குகிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான்-யூசுப் பதான் ஆகியோர் 4 ஆயிரம் முகக்கவசங்களை நன்கொடையாக வழங்குகிறார்கள்.

இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். நாங்கள் உதவுவதற்கு மேலும் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு வெளியிட்டுள்ள வழகாட்டுதல்களை பின்பற்றுங்கள் அல்லது சிறைக்கு செல்லுங்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் காம்பீர் எச்சரித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »