Press "Enter" to skip to content

இங்கிலாந்தின் புகழ்பெற்ற எட்ஜ்பாஸ்டன் மைதானம் கொரோனா பரிசோதனை மையமாகிறது

வார்விக்‌ஷைர் கவுன்ட்டி கிளப் ஏற்கனவே விட்டாலிட்டி பிளாஸ்ட் தொடரை தேசிய சுகாதார சேவையைச் சேர்ந்த ஸ்டாஃப்கள் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று எட்ஜ்பாஸ்டன். வார்விக்‌ஷைர் கவுன்ட்டி கிளப் அணி இந்த மைதானத்தை நிர்வகித்து வருகிறது.

தற்போது இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின எண்ணிக்கை இங்கிலாந்தில் 34 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், 2921 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதமாக எடுக்காததால்தான் தொற்று அதிகரிக்க காரணம் எனக்கூறப்படுகிறது. அதேவேளையில் ஒரு நாளுக்கு 13 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவு எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இந்த மாதம் இறுதிக்குள் தினந்தோறும் ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யும் வகையில் மையங்கள் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மக்கள் பயன்படுத்தும் பொதுவான இடங்களை தற்காலிய மருத்துவமனையாக மாற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில்தான் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானமான எட்ஜ்பாஸ்டனை நிர்வகித்து வரும் வார்விக்‌ஷைர் கவுன்ட்டி கிளப் கார் பார்க்கிங் இடத்தை கொரோனா வைரஸ் பரிசோதனை மையமான மாற்றுவதற்கு முன்வந்துள்ளது.

‘‘எங்களுடைய கவுன்ட்டி கிரிக்கெட், ஆலோசனைக் கூட்டங்கள், வருத்தகம் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்து 29 மே வரை தள்ளிவைக்கப்பட்டுள்ள. இந்த மோசமான நிலையில் உள்ளூர் மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என ஸ்டாஃப்கள் விரும்புகின்றனர். கிளப்பின் உறுப்பினர்கள், முன்னாள் வீரர்கள் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

எங்களுடைய ஒரு சிறிய பங்களிப்பை செய்ய இருக்கிறோம். எங்களது மைதானம் இக்கட்டான நிலையில் மக்களுக்கு உதவ முடியும் என்பதால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என வார்விக்‌ஷைர் கவுன்ட்டி கிளப் தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »