Press "Enter" to skip to content

தனக்கு பிடித்த சிறந்த கிரிக்கெட் வீரர், கேப்டன், ஒருநாள் தொடக்க வீரர் யார் என்பதை ஹனுமா விஹாரி விவரிக்கிறார்

இந்திய டெஸ்ட் அணி பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரி தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர், சிறந்த கேப்டன் யார் என்பதை குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் உள்ளன. இந்த நேரத்தில் வீட்டிற்குள்ளேயே இருக்கும் கிரிக்கெட் வீரர் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியா டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் ஹனுமா விஹாரி ‘‘அனைத்து காலக்கட்டத்திலும் பிடித்த கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர். மகேந்திர சிங் டோனி, விராட் கோலி ஆகியோர் சிறந்த கேப்டன்கள், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாதான் சிறந்த தொடக்க பேட்ஸ்மேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘‘அவரது வேலையை சரியாக செய்வதில் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் விராட் கோலி உதாரணமாக திகழக்கூடியவர். வீரர்கள் அறையில் இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருப்பார். அவரை ரோல் மாடலாகவும், அவரை பின்பற்றக்கூடிய ஒருவராகவும் நாங்கள் பார்க்கிறோம்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »