Press "Enter" to skip to content

ஐந்து மாற்று வீரர்களுக்கு அனுமதி: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஒப்புதல்

வீரர்கள் தொடர்ச்சியாக ஏராளமான போட்டிகளில் விளைாட இருப்பதால், ஐந்து மாற்று வீரர்களுக்கு கால்பந்து கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா காரணமாக கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட உலக விளையாட்டிகள் முடங்கி போயுள்ளன. தற்போது மீண்டும் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கொரோனா காரணமாக முடங்கிய பல்வேறு கால்பந்து தொடர்கள் விரைவில் தொடங்க உள்ளன. ஜெர்மனியின் முன்னணி பண்டேஸ்லிகா கால்பந்து தொடர் இம்மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், அடுத்தடுத்து போட்டிகள் நடப்பதால் வீரர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும். இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சர்வதேச கால்பந்து சங்கத்தின் (ஐஎப்ஏபி) சார்பில், மாற்று வீரர்கள் விதியில் தற்காலிக மாற்றம் செய்ய, சர்வதேச கால்பந்து கூட்டமைப்புடன் ஆலோசித்தது.

இதன்படி, இனிமேல் ஒவ்வொரு போட்டியிலும் ஐந்து மாற்று வீரர்களுக்கு அனுமதி தரப்படும். இந்த மாற்றங்கள் 2020 – 2021 சீசன் முழுவதும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »