Press "Enter" to skip to content

மேஜிக் தருணம் மிஸ்சிங்: இந்திய அணி கேப்டன் விராட் கோலி சொல்கிறார்

ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்பாட்டால் நிச்சயமாக மேஜிக் காணாமல் போகும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று ஜூன் மாதத்திற்குள் கட்டுக்குள் வந்துவிடும் என்று நினைத்தனர். ஆனால் இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் நீண்ட காலம் நீடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

இதனால் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் இருக்க மறுபக்கம் தற்பாதுகாப்புடன் மக்கள் தங்களுடைய அன்றாட வேலைகளை கவனிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விளையாட்டு போட்டிகள் ரசிகர்கள் ஆரவாரத்துடன் நடைபெறும். தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்பில்லை. முதலில் ஒவ்வொரு கிரிக்கெட் போர்டும் யோசி்த்த நிலையில், தற்போது ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு ஒவ்வொரு வீரர்களும் வந்துள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்கள் இல்லாவிடில் நிச்சயமாக மேஜிக் தருணம் காணாமல் போகும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘தற்போதுள்ள சூழ்நிலை வெறிச்சோடிய மைதானத்தில் போட்டியை நடத்தும் நிலையில்தான் உள்ளது. இது உறுதியாக நடக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொருவரும் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால், பேரார்வம் கொண்ட மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே நாம் அனைவரும் விளையாடி பழக்கப்பட்டுள்ளோம்.

பழைய மாதிரி தீவிரத்துடன்தான் விளையாடுவாரக்ள். ஆனால் ரசிகர்கள் இருக்கும்போது அவர்களுக்கும் வீரர்களுக்கும் இடையிலான தொடர்பு, போட்டி சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் டென்சனாக இருப்பது போன்ற எமோசனை வெளிப்படுத்துவது மிகக்கடினம்.

ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் செல்லலாம். ஆனால், மைதானத்திற்கு உள்ளே நடக்கும் மேஜிக் நிகழ்வுகள் நடக்குமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் சூழ்நிலை அப்படி உருவாக்கிவிடும். கிரிக்கெட் போட்டியை நாங்கள் சிறப்பாக விளையாடி விடுவோம், ஆனால், மேஜிக் தருணங்கள் அதனுடன் சேர்ந்து பயணிப்பது மிகவும் கடினம்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »