நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமை ஒருநாள் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்ததையொட்டி சர்பராஸ் அகமதுவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தீர்மானித்தது.
இதற்கிடையே டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில்தான் வங்காளதேசம், இலங்கை அணிக்கெதிரான தொடரை பாகிஸ்தான் சந்தித்தது.
இந்நிலையில் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் அசார் அலி டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் ஆசிய கோப்பை, ஐசிசி டி20 உலக கோப்பை, 9 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால்
இத்தனை போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடுமா? என்பது சந்தேகமே…
Related Tags :
Source: Maalaimalar