Press "Enter" to skip to content

விராட் கோலி என்னை மட்டும் சீண்டவில்லை: வங்காளதேச வீரர் சொல்கிறார்

வங்காளதேச அணியின் மற்ற வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்த நேரத்தில், என்னை மட்டும் விராட் கோலி சீண்டவில்லை என இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, மைதானங்களில் ஆக்ரோசமாக செயல்படக்கூடியவர். எதிரணி வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்தால் பதிலடி கொடுக்க சற்றும் தயங்கமாட்டார்.

தற்போது வீரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது கருத்துக்களை பகி்ர்ந்து வருகிறார்கள். விராட் கோலியுடன் இளம் வயதில் இருந்தே விளையாடி வரும் வங்காளதேச அணியின் தொடக்க பேட்ஸ்மேன் இம்ருல் கெய்ஸ், அந்த அணியின் அனுபவ வீரர் தமிம் இக்பாலுடன் ‘பேஸ்புக் லைவ்’ மூலம் உரையாடினார். அப்போது விராட் கோலி என்னிடம் ஸ்லெட்ஜிங் செய்வதில்லை என்று தெரிவித்தார்.

இதுகுறித்து இம்ருல் கெய்ஸ் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா அகாடமியில் விளையாடிய 2007-ல் இருந்தே எனக்கு விராட் கோலியை தெரியும். நாங்கள் இருவரும் 2011-ம் ஆண்டு முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சந்தித்தோம். அப்போது விராட் கோலி என்னை ஸலெட்ஜிங் செய்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருடன் ஒருமாதமாக செலவிட வேண்டியிருந்தது. ஆனால், அவர் என்னை ஸ்லெட்ஜிங் செய்தார்.

நான் விராட் கோலியிடம் ஏதும் கூறவில்லை. சீனியர் வீரரான தமிம் இக்பாலிடன் சென்று இதுகுறித்து கூறினேன். தமிம் இக்பால் விராட் கோலிக்கு பதிலடி கொடுத்தார். இந்த விஷயத்தை தமிம் இக்பால் சரியாக செய்தார். அவர் மைதானத்தில் விளையாடும்போது ஆக்ரோசமாக இருக்க முடியும்.

அதன்பின் விராட் கோலி என்னிடம் மிகவும் மோசமாக நடந்தது கிடையாது. கடந்த ஆண்டு ஃபதுல்லாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஏறக்குறைய வங்காளதேச அணியின் எல்லா வீரர்களிடம் மோசமாக நடந்து கொண்டார். ஆனால் என்னிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »